Monday, 28 November 2011

என் கண்ணுக்குள் நீ
நான் காணும் இடமெல்லாம்
உன் உருவம்.......
உன் பெயரே
என் வாழ்வின்
சுவாச மந்திரம்...
என்னுள் நீ
உன்னுள் நான்
பிரிந்தாலும்....
வாழ்வுக்கு வரமளிக்கும்
உந்தன் இனிய நினைவுகள்........

Sunday, 6 November 2011

அன்பே என்று நீ என்னை
அழைக்கும் அந்த ஒரு சொல்லுக்கு
ஈடாகாது நான் உனக்காக எழுதும்
1000 கவிதைகள்..........!!!!
நீ கொடுத்த முத்ததில்
அக்சிஜென் அதிகமட......
அதுதான் இன்னும் என்னை
வாழ வைத்து கொண்டிருக்கிறது......

Wednesday, 12 October 2011

எதிரும் புதிருமாய்
அமர்ந்தபடி நாம்
பேசிய கதைகள்
கவிதைகள் எல்லாம்
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.......
தொலைபேசி வழி
நலம் விசாரித்து
ஆறுதல் கூறி
சமாதனம் ஆன
நாட்களையும் தொலைக்க வேண்டியதாகிவிட்டது......
அங்கும் இங்குமாய் ஒட்டி
கொண்டிருந்த உன் நினைவுகளையும்
குருதி கொட்ட கொட்ட வெட்டி
பிரியவிடையும் கொடுத்து விட்டேன்........
இனி
வாழ்க நீ வாழ்க உன் புதிய காதல்......

Saturday, 8 October 2011

திருமணம்

நல்ல இடம்
தட்டி கழிக்காதே -அப்பா
உனக்கு பின்
இரு தங்கைகள் மறந்துவிடாதே -அம்மா
நல்ல சம்பளம்
நல்ல உத்தியோகம் ஒத்துக்கொள்- அண்ணன்
என் வேலைக்கு
அவரிடம் சிபாரிசு செய் -தம்பி
மாமா நல்ல அழகு -தங்கைகள்
ஆனால் நான் இன்னும் சொல்வே இல்லை
என் நினைவில் வாழ்வது
வேறு ஒருவன் என்று.........
நீ என்னுடன் இருந்தபோது
என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாக பிரகாசித்தன.......
நீ என்னுடன் இல்லாதபோது
என் கவிதைகள் எல்லாம்
வெறும் கிறுக்கல்களாக கூட
சுவாசிக்கவில்லை........
நீ என்னை பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள் நிலையாக
இருக்கும் என் கண்களில்
கனவாக அல்ல கண்ணீராக.........
உறக்கம் மறந்து
உறங்க மறந்து வெகு நாட்கள் ஆனதட......
மொத்தமாய் நீ என்னை அள்ளி செல்ல
பித்து பிடித்து போனேன்ட......
ஊமையாய் ஊனமாய் உன்னை
சுமந்துகொண்டே திரிகிறேன் நான்.....
சென்ற நவராத்திரியை
ஒரு இனிப்பை போல்
சுவைத்து மகிழ்தோம் இருவரும்.
இந்த நவராத்திரியில் தனியாக
நிற்கிறேன் கொலு பொம்மையை போல்.......
மீண்டும் மீண்டும்
என்னை காயப்படுத்த
முயற்சிக்காதே..........
உன்னால் நான் இறந்து
வெகுநாட்கள் ஆகிவிட்டது........

Monday, 19 September 2011

என்னை கொள்ளாமல் கொள்ளும்
அரக்கனே.......நித்தமும் நித்திய
ஜீவனாய் வாழ்கிறேன் உன்னோடு......
மீன் துடிக்கிறது நீருக்காக
நான் துடிக்கிறேன் உனக்காக
படைதவனை கண்டால் கேட்பேன்
இருவரம்....... மறக்க ஒரு மனம் கொடு
இல்லையேல் மரணிக்க ஒரு
வாய்ப்பு கொடு.........

Saturday, 17 September 2011

என் மனதை முக்குளிக்க
வைக்கிறேன்......
அது திமிறிக்கொண்டு வெளியேறுகிறது
உன் கால் அடி ஸ்பரிசத்துக்காக...............

Thursday, 15 September 2011

கனவுகளை சுமந்தபடி
என்னை கண்பதக்காக
கால்கடுக்க காத்திருந்துவிட்டு
என்னை காணமல் திரும்பி இருக்கிறாய்
நீ..................
உன் கால் சுவடுகளில்
நீ சிந்திய கண்ணீரும்
உயிர்துளிகளையும் கண்டு
மனம் வெம்பி கொண்டிருக்கிறேன்   
நான்...............

Wednesday, 14 September 2011

உன் நினைவுகளை வெட்டிவிடதான்
நினைக்கிறேன்.......
ஆனால் அது வளர்ந்து கொண்டே போகிறது
என் நகங்களை போலவே.....

Monday, 12 September 2011

உன்னை நினைத்து வாடியது
போதும்......... உன் நினைவால்
ஒவ்வொரு விடியலும் நரகமானதும்  
போதும்...... உன்னால் நான் அழுததும்
போதும்......உன்னால் நான் இழந்ததும்
போதும்........ உனது முத்தங்களும்
போதும்...... நான் பட்ட கஷ்டங்களும்
போதும்...... போதும்மட போதும்மட
உன்னால் நான் வாழ்ந்த இந்த நரக
வாழ்க்கை இந்த ஜென்மத்தில் எனக்கு போதும்மட........

Saturday, 10 September 2011

இந்த எந்திர வாழ்கையில்
தொலைகாட்சி  பிம்பங்கள் இடைய 
தொலைந்துப்போன  உன் முகத்தை
தேடுகிறேன் நான்....
மீண்டும் நாம் சந்திக்கும் வரை
உன் நினைவுகள் என் தோள் சாயும்போதுதான்
சற்று இளைப்பாறுகிறது என் மனம்.......
சிந்திய கண்ணீர் துளிகளை
துடைத்து கொண்டு விரைகிறேன்
மீண்டும் என் எந்திர வாழ்க்கைக்கு............... 

Thursday, 8 September 2011

அசுத்தம் ஆவதக்கே 
மீண்டும் மீண்டும்
குளித்து தயாராகிறாள்
விபசாரி...........

Monday, 5 September 2011

துளிகள்

வரம்
நீ எனக்கு கிடைத்தது

சாபம்
நீ இல்லாமல் வாழ்வது

சிற்றின்பம்
உன்னை நினைத்துக்கொண்டு வாழ்வது

பேரின்பம்
உன்னோடு வாழ்வது

சொர்க்கம்
உனது கொஞ்சல்
நரகம்
உனது மௌனம்

Sunday, 4 September 2011

தோழா.......நாம் இருவரும் எடுத்துக்கொண்ட
புகைபடத்தில் நீ அழகாக  சிரிக்கின்றாய்.......
ஆனால் ஊருக்கு தெரியாமல் என்
மனைவியோடு நீ எடுத்துக்கொண்ட
புகைப்படம் சிரிப்பாய் சிரிக்கிறது
தெருவோர டீக்கடைகளில்..............

Saturday, 3 September 2011

உன் வீட்டு   வாசலில்
மரமாக காத்திருக்கிறேன்
சற்று இளைப்பாறிவிட்டு போ
என் ஆன்மாவது
சாந்தியடையட்டும்.........

Thursday, 1 September 2011

தாய் கண்ணீர் வடிக்க.........
கள்ளி பாலோடு தந்தை
சிரிக்க ........
கள்ளகபடு இல்லாமல் புன்னகைக்கிறது
பெண் சிசு........
நான் சாய்ந்த தூணில்
நீ சாய்ந்த போது
தெரிந்துக்கொண்டேன்
காதல் தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்.......
நான் சந்தித்த ஒரே யுத்தம்
உன் மௌனம்தான்.......
தொடராதே........
பலியாவது  நான் மட்டும்மல்ல
பாழைப்போன என் காதலும் தான்........
நித்தம் நித்தம் ஏமாற்றம்
நித்திரையிலும் ஏமாற்றம்
கண்களுக்கு உறக்கமில்லை
கனவுகளும் தோன்றவில்லை
பணத்துக்கு பஞ்சம்மில்லை
பாசங்காட்ட மனிதரில்லை
இறைவனிடம் கெஞ்சுகிறேன்
அவனோ  வஞ்சிக்கிறான்...........
பலருக்கு இன்பமூட்டி தன்னைதானே
அழித்துக்கொள்ளும் விதவை..........
-வெண்சுருட்டு-

Tuesday, 30 August 2011

DIANA...........

ஆண் பெண் என்று பாராமல்
எல்லோர் இதயத்திலும்  பச்சை கிளியாக
வலம் வந்த நீ  பலருடன் கிசுகிசுக்கப்பட்டாய்!
பரவாயில்லை மறுமணம் புரிந்துக்கொண்டு
புதிய வசந்ததோடு வாழ பிரதித்தபோது
இரக்கமில்லா எமன் உன்னை சொந்தமாக்கி
கொண்டானே....... பச்சை கிளியே எங்கே
பறந்து போனாயோ???????
உலர்ந்து போன உன் நினைவுகள்
இன்னும் என்  கன்னத்தை
ஈரப்படுதுவது  என்ன நியாயம்?????
நான் புகைப்பதையே நிறுத்திவிட்டேன்
காரணம் புகைப்பதால் இதயத்தில்   
ஓட்டை விழுந்து அதன் வலி
நீ வெளியேறி விட்டால்??????
சந்தித்து கொள்ளாமல்
தொட்டு கொள்ளாமல்
விலகி கொள்ளாமல்
தொடர்கிறது உன் இனிய
நினைவுகள்........
கண்டதும் காதலில் நம்பிக்கை
இல்லாத எனக்கு உன் விழிகளை
கண்டதும் வந்தது காதல்.......
என் பெயரை நீ உச்சரிக்காததால்
அது எனக்கு கெட்ட வார்த்தையானது......
நான் என் கவிதைகளில் தேடுவது
உன்னையா இல்லை என் காதலையா?
புரியவைக்க  நீ என் வசம் இல்லை
புரிந்துக்கொள்ள நான் இனி
உன்னவளும் இல்லை ......
உன்னுள் என்னை தேடி தேடியே களைத்து
போகிறேன் நான்  எப்போது புரிந்து
கொள்ள போகிறாய் என்னை.......
உன்னை நினைத்து நினைத்து களைத்து
போன நான் உன்னை மறக்க தூங்கினேன்
கனவிலும் நீ..........
கண்ணீர் கூட சுகமாகிறது
உன்னை நினைத்து அழும்போது .......
காதல்  காற்று இரண்டுமே மூன்று
எழுத்து ஒன்னு வாழவைக்கும்
ஒன்னு சகாடிக்கும் ......
பிறக்கும் போது அறியாத வலியும்
இறக்கும் போது தெரியாத  வலியும்
நீ என்னை பிரிந்த போது தெரிந்துக்கொண்டேன்.....
உன்னை நினைக்கையில் வலிக்கிறது
உயிர்........
உன்னை மறக்கையில்  பிரிகிறது
என் ஜீவன் ... நான் என்ன செய்வேன் .....
உறங்க மனமில்லை நினைவில் நீ
விழிக்க மனமில்லை கனவிலும் நீ .........
நீ இல்லையின்னு ஆனபோது
நான் இருந்தும் இல்லாமல் போனேன்
கண் மூடி காத்திருக்கிறேன்
கனவிலாவது நீ வருவாய் என!   

Monday, 29 August 2011

நிழல்களை நம்பி நிஜங்களை கைவிட்டேன்
வாழ்கையே கானல் நீர் ஆனது...............
என்னில் கலந்தவளே..
இன்னும் நீ என் வசம்தான்..

உன்னக்காக மட்டும்
உன்னில் நான் இன்னுமும் சுவாசிக்கிறேன்..
...
மறக்க முடியவில்லை.. இதை
மறுக்க முடியாது..

யாரும் அறியாமல்
உன் ஆதரவாய் நான்னும்..
என் ஆறுதலாய் நீயும்..

என்னக்காக என்னில் சுவாசிக்கும்..
உனக்கு....
இன்று பிறந்தநாள்..
என்னக்காக நீ பிறந்ததால்
இன்று இது இனிய நாள்..!!

வாழ்க வாழ்க. வளமுடன்...!
வாழ்த்துகளுடன் உன்னக்காக
உன்னில் வாழ்பவன்...!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!
நீ எனக்கில்லைன்னு ஆனபோது
சுவாசம் கூட சுமையானது.........
உன் முகம் அழகு நிலவு
உன் சிரிப்பு மின்னும் நட்சத்திரம்
உன் கூந்தல் கலைந்த கரு மேகம் .....
இப்படி வர்ணிப்பதலோ என்னவோ
வானத்தை போலவே நீயும்
என்னை விட்டு தூரமாவே இருக்கிறாய்..........

Saturday, 27 August 2011

அனுதினமும் உன் நினைவுகள்
என் இதயத்தை உரசி
ரத்தம் கசிய வைக்கிறது.......
மதுவே உன்னை தொடுகிறேன்
நான் தொட்ட மாதுவை மறக்க முடியாமல்.........
நான் பார்த்த போது நீ பார்க்கவில்லை என்னை
நீ பார்த்த போது நான் பார்க்கவில்லை உன்னை
ஆனால் நாம் இருவரும் பார்த்து கொண்டதை
உன் கணவனும் என் மனைவியும் பார்த்துக்கொண்டே
இருந்தார்கள் .................
அர்சனைக்கு தயாராவோம் என் பழைய காதலியே..............

Thursday, 11 August 2011

தோழா....... தொலைந்து போன என் நினைவுகளை
திருப்பி தந்தவன் நீதான் ............ஆனால் நான்
மீண்டும் தொலைத்து விட்டேன்....... இப்போது
தொலைத்து என் நினைவுகளை அல்ல.......
உன்னையும் என் நட்பையும் தான்..............!

Monday, 8 August 2011

இந்த பதிவுகள் உனக்காக
உனக்காக மட்டுமே......
என்னில் நீ மட்டுமே........இதை உணராமல்
offline நில் நீ இருந்து வெறும் like
மட்டுமே click செய்வதால் unlike ஆகிறேன்
நான் ...........
நான் அழகை பார்த்து பிரமித்து இருக்கிறேன்
ஆனால் என்னை நட்பால் பிரமிக்க வைத்தவன்
என் தோழன்தான்.........
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ஒரு சதுரங்கதுக்குள் பழகிப்போன (fb )
முகம்மானோம் ..........ரத்த உறவு இன்றி
எந்த பிறவி சம்மதம் இன்றி
உனக்காக நான் துடிப்பதும்
என்னக்காக நீ துடிப்பதுதான் நட்பு.......

Saturday, 6 August 2011

தாய்க்கு  கொள்ளிவைக்க தலைப்புள்ள
வேணும்மின்னு சாஸ்திரம் சொல்லுமையா.....
உயர்ந்த சாதி பொண்ணை காதலித்த என்
ராசாவே. உன் பொன் உடலுக்கு.....
கொள்ளி வைக்க இந்த சாதி சொல்லுதையா
சாதிக்கு கொள்ளி வைக்க யார் வருவார்?
நீதிய யார் சொல்லி வைப்பார்......?

Wednesday, 3 August 2011

இன்று நானும் என் காதலனும்
பூக்களினால் அலங்கரிக்க பட்டு இருக்கிறோம் ............
அவன் அவனின் மனைவியுடன் மணவறையில்......
நான் என் காதலுடன் கல்லறையில்...................
நீ உன்னை மறந்து..
நான் என்னை அறியாமல்.

நம் சந்திப்பில்.....
நம்மை மீறி,
...சூழ்நிலையை தாண்டி..
உறவுகளை கடந்து..

நம் விழிகளில் திரண்ட
கண்ணீர் துளிகள்..
அணை மீறியதில்...

நான் சொன்ன..
நீ சொல்ல மறந்த..

பட்டுபோன என் காதல்
வேர்கள் ஈரபடுகின்றன..!
நம் காதல் இன்னும் எனக்கு....நிகழ்காலமே.....
ஆனால் உனக்கு அது இறந்த காலம்
எனக்கு நீதான் நிஜம்......
நீ மட்டுமே நிஜம்.......
ஆனால் நான் உனக்கு........
வெறும் ஜடம் வெறுமையை ஒரு ஜடம்........
அன்று
உன்னால் நிராகரிக்கபட்டவன் நான் ......
இன்று
மீண்டும் உன் வாசலில் ............
காரணங்கள் கேட்டு அல்ல ......
உன் "நிழல்" மட்டும்மே வேண்டி ....!!

Sunday, 31 July 2011

நீ வாழ காற்று, நீர், உணவு, தேவை
ஆனால் நான் வாழ நீ மட்டும் போதும் ...........

Saturday, 30 July 2011

welcome to my kavithai Blog...

Its a page with my kutti kavithai.. Hope i could put more kavithai on this Blog.. please let ur valuable comments on my post...