Friday, 24 August 2012

அவன் விழிகளைக் கண்டவுடன்தான் 
என் கற்பனை கடல் அலமோத 
ஆரம்பித்தது.........
சலிப்பூட்டும் உலகில் 
களிப்பூட்டும் அவனும் கனி இதழ் 
அவன் இதழ்களில் தேங்கிக்கிடக்கும்
கோடான கோடி முத்தங்கள்.....
அனுதினமும் காத்திருக்கிறேன்
அவன் விழிகளின் அழைப்பிற்காக................

எங்கு பிரிந்தோம் ..?
அங்கு சேர்ந்தோம் ...

எதை தொலைத்தோம் ..?
அதை வசம் கொண்டோம் ...

அன்று மறந்தோம் ..?
இன்று தொடர்கிறோம் ...

தப்பா..!!??
தவறா ..!!??
என யோசிக்கும் நம் மனம் மறவா...!

உடன்படும் இல்லை..
இடைபாடும் இல்லை - நம்மில்

வா......!

தூரம் தெரியும் வரை
சேர்ந்து நடப்போம்...
தூரமாக நம் காதல்..!!!
கட்டி அணைத்து
சாரி சொல்லும் 
உன்னிடம்.....
எத்தனை முறை 
வேண்டுமானாலும்
கோபம் கொள்ள 
நான் தயார்..........

Saturday, 9 June 2012


என் தனிமையில்
என்றும் அழையா
விருந்தாளியாய் உன்
நினைவுகள்......

நேசித்ததை மறந்து
விடலாம்......
சுவாசித்த உன்னை
மறப்பது எப்படி......

மழையில் ஒரே குடையில்
நடக்க ஆசை.......
உன் தோள் சாய்ந்து
கதைகள் பேச ஆசை......
உன் விரல் பிடித்து வலம்
வர ஆசை......
நம் சண்டைக்கு பிறகு
சமாதான முத்தம்
பெற ஆசை.....
உன் காதல் மொழி
கேக்க ஆசை......
நான் வாழும் வரை
உன்னுடன் வாழ ஆசையோ ஆசை......

எப்போதும் பேசும்
சுடும் வார்த்தைகளை விட
மனதுக்கு பிடித்தவர்கள்
காட்டும் மௌனம்
கனமாய் கனக்கிறது
இதயத்தில்.......

உன்னை காதலிப்பது
போலவே எனக்கு
வரும் கனவுகளையும்
காதலிக்கிறேன்.....
காரணம்......
அந்த கனவில்
நீ வருவதால்.....

நீ கொடுத்த கவிதை
இன்னும் இனித்துக்
கொண்டே இருக்கிறது
என் இதழ்களில்....... 


நான் உறங்கினாலும் 
விழித்துக் கொண்டே 
இருக்கிறது உன் நினைவுகள்
என்னுள்....

Friday, 11 May 2012

தொலைவாக இருந்தாலும்
தொலையாமல் இருக்கிறாய் 
என்னுள்............

Thursday, 10 May 2012


எனக்காக நீ இல்லாமல்
போனாலும்.....
என் காதல்  உனக்காக
இருந்துக்கொண்டே  இருக்கும்
நான் வாழும் வரை....

Wednesday, 9 May 2012

என் கைக்குள்
உன் கை.....
ஆஹா......!!!!!!!!
உலகமே என்னுள்......

Saturday, 5 May 2012


பிரியமானது எல்லாம்
வெகுதொலைவில்......
அன்று நிலா....
இன்று அந்த நிலவாய் நீ...........

Thursday, 3 May 2012


கவலை தருணங்களில் உன்னை
நினைக்க மறந்தாலும்......
இன்ப நாட்களில்  உன்னை
நினைக்காமல் சுவாசித்தது
இல்லை......

Wednesday, 25 April 2012


உன்னை யார்
வேண்டும்னாலும் நேசிக்கலாம்..........
ஆனால் உன்னை
சுவாசிப்பது நான்
மட்டும்தான்..............

Monday, 23 April 2012


நீ மழையை ரசித்தாய்
நான் மழையில்
நனைந்த உன்னை ரசித்தேன்.....
சுகமாகதான் இருக்கிறது
தனிமையில் உன் நினைவுகளோடு
பயணிப்பது..............

Friday, 20 April 2012


மணிக்கணக்கில் உன்னிடம்
பேசினாலும் பிரியும்போது
கலங்கத்தான் செய்கிறது
மனமும் கண்ணும்.............

Thursday, 19 April 2012

பேசியது என்னவோ நீதான்.....
ஆனால் இனிப்பது என்னவோ
என் நுனி நாக்குதான்,.......

கைக்கு எட்டாத நிலாவாய்  நீ.....அண்ணார்ந்து பார்த்த  படியே நான்.............
காதலுக்கு கண் இல்லையா 
யார் சொன்ன???
எனக்கு உன் கண்களை 
பார்த்துதானே காதல் 
வந்தது.....
வலிக்காமல் சாக
வேண்டுமா????
காதலித்து பார்.......
என்னையே நான் 
நேசிக்கிறேன்.......
காரணம் உன்னை 
நான் காதலித்ததால்.....
ரத்தம் இல்லாமலே 
வலிக்கொடுக்கிறது
உன் பிரிவு.............
கத்தி இல்லாமலே 
இதயத்தை 
அறுத்தெடுக்கிறது 
உன் நினைவு.......
நான் சோர்ந்துபோகும்
போது.....நீ கட்டியணைத்து 
ஆறுதல் கூறும்...
அந்த தருணத்துக்காகவே 
தினம் தினம் சோர்ந்து போகிறேன் 
நான்......
நீ சிந்தும் புன்னகையில் 
உயிர் பெறுகிறது....
நான் எழுதும் 
உயிரில்லா கவிதைகள்.....
பசும்பால் கேன்களை 
கண்டு கண்ணீர்
வடிக்கிறது..
பசியில் தளர்ந்து 
போன கன்று.....
எனக்கு பிடித்ததெல்லாம் 
பிடிக்காமல் போனது 
என்னவனுக்கு 
பிடிக்காததால்...
தொலைந்தது அனைத்தும் 
உன்னால் கிடைத்தது....
இப்போது நீயே
தொலைந்து போனாய் 
என்னை விட்டு......
இனி நான் தொலைக்க 
வேறு என்ன இருக்கிறது.........
நீயும் எனக்கு 
கடவுள்லானாய்..........
காதல் வரம் 
கொடுத்து.....
எப்போதும் உன்னிடம்
தோற்றுபோகவே விரும்புகிறேன்.....
காரணம்.......
என்னை ஆறுதல் படுத்த 
நீ கொடுக்கும் அந்த 
ஒற்றை முத்தத்திற்காக......
ஆதி காலத்து 
கோவலனை...
நிகழ்காலத்தில் 
கண்டு விட்டேன் 
உன் உருவில்.....
என் கவிதைகள்
என்னை கவிஞர் 
ஆக்கவேண்டாம்....
உன் காதலியாக்கினால்
மட்டும் போதும்................
அன்பே மறுதேசத்தில் இருந்து 
நீங்கள் 
அனுப்பி வைத்த 
வாசனை திரவியம்....
ஈடாகவில்லை 
உங்கள் வியர்வை
வாசத்துக்கு......
வழி மறந்தது நீ 
வலிக்கிறது எனக்கு.....
வலிமை வேண்டும் 
உன்னை மறக்க.......
வழியிருக்க சொல்......
வழிகிறது கண்ணீர்...

கண்கள் இருண்டது
மூச்சு திணறியது
இதயம் இரண்டானது
புன்னகை அழுகையானது
கனவுகள் மங்கியது
எல்லாம் உன் பிரிவால்.......
காணமல் போனது நீ மட்டும் மல்ல
என் காதலும்தான்.......

வெட்டிவிடதான் நினைக்கிறேன்
உன் நினைவுகளை ..........
ஆனால் அது வளர்ந்து கொண்டே போகிறது 
என் நகங்களை போல....
காதல் கவிதை 
ஒன்றை யோசித்தேன் 
கற்பனையில் வந்தது
உந்தன் பெயர் மட்டுமே........
அதையே எழுத நினைத்தேன் 
ஆனால் மற்றவர்களும் உன்னை
கற்பனையில் கண்டு விடுவார்கள்
என்ற அச்சத்தில்
பூட்டி வைத்து விட்டேன் 
என் இதயத்தில் உன் பெயரை............
என் பேனா முனையும் 
என் தமிழையும் 
நெருக்கப்படுதியது 
நீதான்......
உன்னுள் என்னை
தேடி தேடியே 
களைத்துப்போகிறேன் 
நான்....................

உன்னை கனவிலாவது
சந்திக்கலாம் என்றால்........
உன் நினைவுகள் என்னை
உறங்க விடமறுக்கிறது............


முதன் முறையாக நீ
என்னை அணைத்தபோது ......
நான் உடுத்திருந்த புது
சேலையில்.....இன்னும்
உன் வாசம் இருக்கவே
செய்கிறது....மறுபடியும்
அதை உடுத்தும்போது
அந்த நாளும் மனசும்
விஷேசமாகிறது உன்
அணைப்பை எண்ணி.......
நமது சந்திப்பில்
சல்லாபம் கொள்கிறது...
காற்றும் .....காதலும்......
நீ கேட்ட வார்த்தையே 
பேசியதில்லையாம்.....
இப்பொழுதுதான் 
தெரிகிறது அந்த வார்த்தைகள்
ஏன் கெட்டன என்று.....
காதலிக்கிறேன் ...
நிச்சயம் கை பிடிப்பேன் 
என்றான்.....
சொன்னபடியே செய்தான் 
காதலித்தது என்னை
கை பிடித்தது அவளை....

எல்லா சொற்களும்
தீர்ந்துவிட்டது.....
உன் புன்னகையை
கொஞ்சம் தா
கவிதை எழுத.......

உன்னை நினைத்து காணும்
கனவு கூட அழகாக இருக்கிறது
உன் இதழை போல.........
உன் ஒரு நொடி 
மௌனத்தை கடக்க 
ஒரு யுகத்தையே 
கடந்த பிரமை.....
தினம் தினம் 
மழை பெய்தாலும் 
அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன் 
நான்.....
உன்னை ரசிப்பது போலவே.....
காதல் அழகான 
ஒரு சொர்க்கம்....
அதன் வலியை
அறியாதவரை...........
எல்லோரையும் விரட்டுவது 
போலத்தான் என்னையும் 
விரட்டுகிறது வறுமை.......
நாடு விட்டு நாடு 
வந்த போதுதான் 
தெரிந்தது தனிமையின் 
கொடுமை......
வீட்டில் இருந்து 
கிளம்பும் போது அம்மா
கொடுத்த முத்தத்தின் 
ஈரம் இன்னும் என்
கன்னத்தில்.........
கை காட்டி பிரியும்
தருணத்தில்....
உடன்பிறந்தோரின் கண்ணீரில்
கனக்கிறது மனம்.....
மீண்டும் உயிரோடு
ஒருவர் ஒருவரை
சந்திக்கும் வரை....
உயிற்ற கடிதமே
நமக்கு ஆறுதல்.....
போய் வருகிறேன்.....

உன்னோடு பேசிய
வார்த்தையும்....
பேச போகும்
வார்த்தையும்
100 முறை ஒத்திகை
காண்கிறது எனக்குள்.....

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயக்கப்படுகிறதாம்............
ஆனால் நம்
திருமணம் மட்டும்
உன் காந்த பார்வையால்
நிச்சயக்கப்பட்டது............
நான் புகைப்பிடிப்பதையே 
நிறுத்திவிட்டேன்.........
காரணம்...........
புகைப்பிடிப்பதால் 
இதயத்தில் ஓட்டை 
விழுந்தது அதன் வலி 
நீ வெளியேரிவிட்டால்...............